Saturday, March 15, 2025

பூரப் பற்பம்

 வணக்கம்.


ஆறாப் புண்கள் மற்றும் புற்றுப் புண்கள் ஆற்றும் ...


பூரப் பற்பம்.


சுத்தி செய்த பூரம் 5 கிராம்.

படிகாரம்...35 கிராம்.



பற்பம் செய்முறை....


படிகாரத்தை கல்வத்தில் போட்டு பொடி செய்து இரண்டு பங்காக வைத்துக் கொண்டு ,ஒரு பங்கு ஒரு சட்டியில் போட்டு, நிரப்பி,நடுவில் பூரத்தை பொடிசெய்து தூவி,பின்பு மறுபாதி படிகாரத்தை நிரப்பி, மேல் சட்டி மூடி சீலைமண் 3 செய்து அடுப்பேற்றி தீபம் போல் 3 மணிநேரம் எரித்த பின்பு, அடுப்பும் சட்டியும் ஆறின பிறகு, பிரித்துப் பாற்த்தால் பூரம் படிகாரத்துடன் சேர்ந்து உறவாடி காண்போம்.அரைத்து பத்திரப் படுத்தவும்...


பற்பமளவு...50 மி.கி முதல் 100 மி.கி வரை ...


துணைமருந்து...தேன் மற்றும் நோய்க்கு தகுந்த படி....


தீரும் நோய்கள்....


வெளிப் பிறயோகமாக தேன் விட்டு குழைத்து ஆறாப் புற்றுப் புண்கள், புரையோடும் புண்கள்,குழிப்புண்கள்,எதினாலும் ஆறாத்த இரணங்கள் விரைவில் ஆறும்...


உள்ப் பிரயோகமாக தேனுடன் உண்டுவர....


ஆறாப்புன்கள், கிரந்திப் புண்கள், மற்று புற்றுப் புண்கள் விரைவில் குணப்படும்....


எடுத்துக்காட்டு...


1).வெளிநாட்டு கெமிக்கல் கடையில் கிடைக்கும் பூரம் பயன்பெடுத்தினால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்...


2) எரிப்புத் திட்டம் தவறினால் பதங்கம் ஏறிவிடும் என்று அறிக. அப்போது மருந்தின் குணம் குறைவாகும்...ஆகயால் கவனமாக எரிக்கவும்...




நன்றி....

No comments:

Post a Comment