Saturday, August 6, 2022

கனக இலிங்க கற்ப்பூர மெழுகு.

வணக்கம் ......

கனக இலிங்க கற்ப்பூர மெழுகு.


சுத்தி இலிங்கம்....10 கிராம்.
சுத்தி வீரம்...10 கிராம்.
சுத்தி பூரம்....10 கிராம்.

சுத்தி இரசம்...5 கிராம்.
சுத்தி கெந்தி...5 கிராம்.
சுத்தி துரிசு...5 கிராம்.
சுத்தி தாளகம்...5 கிராம்.
இந்துப்பு..5 கிராம்.

சாதிக்காய்...5 கிராம்
கார்போகரிசி...5 கிராம்.
சுக்கு..5 கிராம்
மிளகு...5 கிராம்.
திப்பலி..5 கிராம்.
கொட்டம்...5 கிராம்.
சிற்றரத்தை...5 கிராம்.
நறுக்குமூலம்...5 கிராம்.
சிவப்பு சித்திரமூலம்...5 கிராம்.
அக்கிரகாரம்...5 கிராம்.
அரிச்சென்னி நாயகம்...5 கிராம்.
ஓமம்...5 கிராம்.

நாட்டு இஞ்சி சாறு...
தேன்....

தேவையான அளவு....

மெழுகு தய்யார் செய்யும் விதம்...

பாடாணங்களை தனி தனியாக கல்வத்தில் போட்டு பொடி செய்து, பிறகு முறைப்படி ஒன்று சேர்த்து அரைத்து பின்பு,சிறுது, சிறுதாக இஞ்சி சாறு விட்டு அரைத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூர்ணம் சேர்த்து மூன்று நாட்கள் நெகிழ அரைத்து,  பிறகு கல்வத்துடன் காயவைத்து, பின்பு சுத்த தேன் விட்டு மூன்று நாட்கள் அரைத்து மெழுகு பதத்தில் பத்திலப்படுத்தவும்....

மருந்தளவு...

130 மி.கி முதல் 200 மி.கி. வரை...

துணைமருந்து....

இஞ்சிசாறுடன் தேன் கலைந்து, அல்லது சம்பா அரிசி தவிடட்டில் புரட்டி சாப்பிட்டு பிறகு காச்சி ஆறின பசும் பால் குடிக்கவும்.,அல்லது பனை வெல்லம், அல்லது வெண்ணை,மற்று தகுந்த துணைமருந்துகள்.

மெழுகு சாப்பிடும் காலம்....7 நாட்கள் 14 வேளை ஒரு தடவை....

தீரும் நோய்கள்....

அனேக விதமான கப நோய்கள், மந்தார காசம், வயற்றுவலி, வயற்றில் புண், சூதக வாத சன்னி,  தோடங்கள், பிரமேகங்கள்,  காமாலை, கிரந்திகள்,  நீர்கடுப்பு, காச்சல்கள், சூலைகள்,முடக்குவாதம், வயற்றுப் பெருமல், ஆஸ்துமா, வாயுக்கள்,நெஞ்சடைப்பு, மாற்பில் குத்து, குதிரை வலிப்பு,மூலை முளை, பவுத்திரம், ஆசன வெடிப்பு, கற்ணிக கெட்டு ஆகின அனேக நோய்கள் மாறும்...

இது ஒரு சிறைந்த மெழுகு.....

நன்றி....

Sunday, July 17, 2022

காலாந்தக ககெவுரி இரசகர்ப்பூர பதங்கம்.


காலாந்தக கெவுரி இரசகர்பூரப் பதங்கம்.

1.சுத்தி செய்த கெந்தி
2.சுத்தி செய்த தாளகம்
3.சுத்தி செய்த வெள்ளை 
4.சுத்தி செய்த கெவுரி
5.சுத்தி செய்த வீரம்
6.சுத்தி செய்த பூரம்.
7.சுத்தி செய்த காந்தம்.
8.சுத்தி செய்த இலிங்கம்
9.சுத்தி செய்த மனோசிலை
10.சுத்தி செய்த துரிசு

 வகை ஒன்றுக்கு 10 கிராம் 

மருந்தளவு...15 மி.கி. முதல் 25 மி.கி.வரை.

மருந்து உண்ணும் காலம்...3 நாட்கள் 6 வேளை, அல்லது 5 நாட்கள் 10 வேளை....பின் தேவைப்பட்டால் 1 மாதத்துக்கு பிறகு அருந்தவும்...

துணைமருந்து...

பொரி மாவு, பனை வெல்லம், முலைப்பால், வெண்ணை,நெய்,தேன்,சர்க்கரை, இளகங்கள் ஆகினவை ஆகும்...

பத்தியம்....கடும் பத்தியம்.

தீரும் நோய்கள்.....

சூலைகள், புற்றுகள், மேகநோய்கள்,வெட்டை நோய்கள், டெற்றனஸ் என்ற சன்னி, சத்து வாதம், வாதம் 80, புற்றுகள் 216 வகை, விஷநீர்,பெண்குறி பழுப்பு, புண்கள், நவமூலங்கள், தோல் நோய்கள், நட்டைல்லு கூண் வாதம், குஷ்ட நோய்கள் ஆகின அநேக கொடும் நோய்கள் குணப்படும்....

நன்றி...

சுவாமி பத்மநாபா
(தமிழ் மருத்துவ பண்டிட்)
கைபேசி.9496578362

இரசமெழுகு



கொடிய மூலநோய்களை குணப்படுத்தும் புகள்பெற்ற ...

இரச மெழுகு...(அனுபவ முறை)

மிக்க நல் முறையில் சுத்தி செய்த இரசம் பலம் 1 (35 கிராம்)

பசும் பாலில் சுத்தி செய்த கெந்தி 2 பலம். (70 கிராம்)

சேரன்க் கொட்டை குழித்தைலம் 3.5 பலம்bnqq.  (122.5 கிராம்)

தண்ணீரில் ஊறப் போட்டு தோல் உரித்து ,பின் காயவைத்து உலத்தின எள்ளு 5 பலம்(175 கிராம்)

சிவப்பு கொடுவேலி வேர் மேல்ப் பட்டை தூள்....70 கிராம்.

நயம் கரிம்பு வெல்லம் 5 பலம் (175 கிராம்)



மருந்தளவு...

500 மி.கி.முதல் 1 கிராம் வரை தினம் இருவேளை உணவுக்கு பின்....

மருந்து உண்ணும் காலம்...11 நாடகள் வரை ஒரு தடவை....
மறுபத்தியம் 11 நாட்கள். பின் மருந்து தேவையானால் 15 நாட்களுக்கு பின் அருந்தவும்...

எடுத்துக்காட்டு...மறு பத்தியத்தின் பிறகு 'எள்ளைணை' தேய்து தலை முழுகவும்...சிலரில் தேகத்துகு மமைச்சல் காணும். அப்போது இரண்டு தேங்காயை திருகி பால் எடுத்து, அப்பாலில் 2 எலுமிச்சம் பழம் பிழிந்து சேர்த்து சிரசுமுதல் தேகமெல்லாம் பூசி சிறு வென்னீரில் குளிக்கவும், நமைச்சல் தீரும்.

தீரும் நோய்கள்...ஆசன பவுத்திரம், ஆசன வாய் வெடிப்பு, குடல் வால் வெடிப்பு, கொடிப் பவுத்திரம், கீழ் மூலம்,ரெத்த மூலம் 9 விதமான மூலங்கள்,21 விதமான மேகங்கள், ஆறாப்புண்ணுகள், கிரந்திகள்,மேகபடை,மேகத்தடிப்பு,ஆண் குறியில் பெண்குறியில்,சிறுநீர் தாரையில் வரும் புண்கள் ஆகினவ விரைவில் இமெழுகினால் குணப்படும்.

நன்றி...

மருத்துவம் சம்பந்தமான தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்....

தமிழ் மருத்துவப் பண்டிட்

சுவாமி பத்மநாபா
கைபேசி என். 9496578362

Sunday, June 6, 2021

தாளக கட்டு பற்பம்

 குழுவிலிருக்கும் அனைத்து வைத்தியர்கள்கும் வணக்கம். 

 தாளகக் கட்டு பற்பம் 

 (இரோமச் செய்நீரினால் தயார் செய்வது) (அனுபவ முறை) 

 சிறு துண்டுகளாகச் செய்து சுண்ணாம்பு சுத்தி செய்த தாளகம் 35 கிராம். 

 இரோமச் செய்நீர்...தேவயான அளவு.

 சிப்பிச் சுண்ணம் ...தேவயான அளவு.

 மருந்து தய்யார் செய்யும் விதம். 

 சுத்தி செய்த தாளகக் கடைகளை ஒரு மண் அகலில் வைத்து அடுப்பேற்றி தீபாக்னியாக மூன்று மணி நேரம் சொட்டு சொட்டாக இரோமச் செய்நீர் சுறுக்கு தாக்கவும். 

பின் பாற்த்தால் தாளகக் கட்டி சிவப்பு நிறமாக மாறிவிடும். அதை கல்வத்தில் கொட்டி இரோமச் செய்நீரினால் ஒரு சாமம் நன்கு அரைத்து ஒரே விலையாக செய்து காயவய்க்கவும். 

 பின் ஒரு மண்குடுவை எடுத்து அதில் நாலுவிரல் கனம் சிப்பிச் சுண்ணதை தூவி சற்று கைவிரல்களால் அமுக்கி, மேல் விலை வைத்து, விலைய்கு மேலும் நாலுவிரல் கனத்தில் சிப்பிச் சுண்ணதை கொட்டி ,சில்லிட்டு, சுண்ணாம்பு சீலை செய்து, அடுப்பேற்றி ஆறுமணி நேரம் தீபாக்னியாக தீயெரித்து, ஆறினபின் சட்டி திறந்து பார்த்தால் தாளகம் ஓறஞ்சு நிறத்தில் கெட்டி இருப்போம். இடை பார்த்தால் 50 முதல் 60 கிராமுக்குள் ஆகிவிடும். 

 வீண்டும் விலை கல்வத்தில் இட்டு பொடிச் செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணிநேரம் நான்கு அரைத்து மூன்று அல்லது நாங்கு விலைகளாக செய்து காயவைய்க்கவும். இரண்டாமதும் முன்போல் புது சிப்பிச் சுண்ணத்துகுள் வைத்து, சுண்ணாம்பு சீலை செய்து அடுப்பேற்றி கமலாக்னியாக ஆறுமணி நேரம் எரித்து, சட்டி ஆறினபின் திறந்து பார்த்தால் விலைகள் பாதி சிவப்பும், பாதி கறுப்பு நிறவுமாகி மாறியிரிப்போம். இப்போது தாளகத்தின் இடை 75 கிராம் அளவில் ஆகிவிடும்

. வீண்டும் விலைகளை கல்வத்தில் இட்டு, பொடி செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணி நேரம் அரைத்து மிகவும் சிறு விலைகளாக செய்து காயவைத்து, முண்போல் புது சிப்பிச் சுண்ணத்துக்குள் வைத்து, சுண்ணச் சீலை செய்து ஆறுமணி நேரம் முன் போல் கமலாக்கினியாக எரிக்கவும். சட்டி ஆறின பின் பிரித்து பாற்த்தால் முழு விலைகளும் கறுப்பு நிறமாகி மாறி இருப்போம்....இடை 90 கிராம் அளவில் இருப்போம். 

 இன்னும் 4 ம் 5 ம் புடங்கள் சிறுவிலைகளாக செய்து, தீபாக்னியாக தீயெரிக்கவும். 4 அல்லது 5 ம் புடத்தில் விலைகள் முழுமையாக மல்லிகை பூவின் நிறமடையும் என்று அறிக. 

 தற்ப்போது மருந்தின் இடை கிட்டத் திட்ட 125 கி. அளவு இருப்போம்.. விலைகளை கல்வத்தில் கொட்டி அரைத்து பொடி செய்து ஒரு கோப்யில் இட்டு சுத்த தன்னீர் விட்டு நன்றாக பிசெய்ந்து பிசெய்து, தெளிவு நீரை இறுத்து, புது தண்ணீர் ஊத்தி, ஊத்தி அய்ந்து தடவை, தெளிவு இறுத்து பாற்த்தால் வெடியுப்பு கரைந்து விட்டு 35 கிராம் தாளகம் மட்டும் கிடைக்க வேண்டும்.... தெளிவிறுத்து வெடியுப்பை மாற்றின பின் தாளகத்தை காயவைத்து, ஒரு புது சட்டியில் போட்டு வறுக்கவும். கொஞ்சம் கூட புகையாமல் முழுக் கெட்டாக தாளகம் நிற்ப்போம். வறுத்து எடுத்த, கெட்டின தாளகத்தை கல்வத்தில் போட்டு மூன்று மணிநேரம் அரைத்து பத்திரப்படுத்தவும்... நிறம் ....மல்லிகைபூவின் நிறமுடய பற்ப்பமாகி இருப்போம்.


 மருந்தளவு....25 மி.கி. முதல் 50 மி.கி வரை இரு வேளை உணவுக்கு பின் 5 முதல் 10 நாட்கள் வரை மட்டும் ஒரு தடவை..பின் தேவைப்பட்டால் 30 நாட்கள்கு பின் அருந்தவும்.  

துணை மருந்து... 

 தேன்,நைய்,,பனை வெல்லம் திரிகடுகு சூர்ணம்+ தேன், தகுந்த இளகங்கள், ஆகினவை... 

 தீரும் நோய்கள்....

 நுரையீரல் வீக்கம், நுரையீரலழற்சி, பித்த வெடை, பித்தக் காச்சல், பித்தம், அனேகவிதமான கப நோய்கள்,மந்தார காசம், பித்த காசம், பித்த க்ஷயம், அனைத்து விதமான எலும்புருக்கி நோய்கள், இரைப்பு, இரைப்பிருமல், ஈளை, வலிப்பு, மேகம், அனேக விதமான தோல் நோய்கள், சீதசன்னி,ஆகின அனேக நோய்கள் மாறும்...

 பத்தியம்...

உப்பு, புளி மிகவும் தவிற்க்கவும்.

 நன்றி.....

 தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்... சுவாமி பத்மநாபா. 

கைபேசி.9496578362.

Sunday, February 21, 2021

பூநாக இலிங்க செந்தூரம்


: பூனாக இலிங்கச் செந்தூரம் 


 சுத்தி செய்த இலிங்கம் .. ..100 .. கிராம் . தண்ணீர் வெட்டான் கிழங்கை இடித்து பிழிந்த சாறு ..2 .1/2 .. லிட்டர் . 

 

. மருந்து அளவு :: 100 மி.கி.அளவு முதல் 200 மி.கி.அளவு வரையும் கொடுக்கலாம் 

.. அனுபானம் :: தேவைக்கேற்ற லேகியம் , சூரணம் ,நெய் ..போன்ற துணை மருந்தில் கலந்து தரலாம் ..

 தீரும் நோய்கள் :: உற்சாகத்தையும் உடல் பலத்தையும் உண்டு பண்ணும் தாதுக்கள் குறையை நீக்க நல்லதொரு மருந்து . உடம்பில் இழந்து போன அத்தனை சத்துக்களும் கிடைக்கும் உடல் பலகீனத்தை போக்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும் ..ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்று அறிக.

 சுவாமி பத்மநாபா. 

கைபேசி..9496578362.

Friday, August 21, 2020

குக்குட சகஜராதி முக்கூட்டு

 குக்குட சகஜராதி முக்கூட்டு என்றும், கரும்கோளித் தைலம் என்றும் அழைக்கப்படும் காயராச ராசாங்க சர்வாங்கம் (இது என் பரம்பரை அனுபவ முறை) 

 இதின் மகிமை தெரியவேணுமானால் மருந்து செஞ்சு நோயாளியிடம் அருந்தி பழகவேண்டும்.ஒன்று மட்டும் சொல்வோம்.இம்மருந்து ஒரு வைத்தியனின் பிழைப்பிர்க்கு ஆகும்.

 பச்சிலை வக....

 பொன்குறண்டி (கடல்றாஞ்சி),ஆடாதோடை, ஆவணக்கு, கரும்குறுஞ்சி கூவளம் (வில்வம்) கொடுப்பை முக்கம்பாலை (ஏழிலம் பாலை) கரிசாலை கருவிலாஞ்சிகுடம் பால்வள்ளி ஊமத்து...2 (நீலை,வெள்ளை) கொடுத்துவா (சிறுகாஞ்சொறி) குறண்டி 2 (வள்ளி குறண்டி, கரும் குறண்டி) நிலநாரகம் (நிலைவ்ளாத்தி) ஆனைச்சுவடி இலைக் கள்ளி நொச்சி 2 (நீல, வெள்ள) பிரஸாரணி (இலையில் பல்வெட்டுகளோடு கூடின முதியார்க் கூந்தல்) எட்டி 4 ( ஸாதா எட்டி, வள்ளி எட்டி, பொரி எட்டி, மிளகுதான்றி) முக்கறட்டை நாயுருவி 2 (சிறு நாயுருவி, பெரும் நாயுருவி) முரிங்கை இலை எருக்கிலை உத்தாமணி புங்கின் இலை சிற்றாமுட்டி ஒவொன்று பச்சிலை 500 கிராம் அளவு (இடித்து சார் எடுக்கவும்) புளித்த காடிநீர் 3 நாழி. இளநீர் 3 நாழி இளநீர் கதம்பைச் சார் 1.1/2 நாழி. கரும்கோழி 2 (கோளியின் கழுத்து அறுத்து ரத்தம் கொதிதத்து கொண்டிருக்கும் எண்ணையில் ஊத்தவும். பின் நெய் தனியே ஊற்றி சேர்க்கவும். பின் கோளியின் துஷ்டுநீக்கி சிறுதாக நுறுக்கி உரலில் போட்டு, அத்துடன் 500 கிராம் அமுக்குரம், 500 கிராம் கொம்பரக்கு சேர்த்து நன்கு இடித்து குடிநீர் 3 தடவை செய்து ஊற்றி சேர்கவும். நெல்லிவற்றல் 500 கிராம். தனியாக குடிநீர் செய்து சேர்க்கவும். தேவதாரம்..500 கிராம் (தனியாக ககுடிநீர் செய்து வடிக்கட்டி சேர்க்கவும். எண்ணை வகை நிம்ப எண்ணை..2 கிலோ. கரிஞ்சொட்டை எண்ணை 1 கிலோ. புங்கு எண்ணை 1 கிலோ. ஆவணக்கு எண்ணை.1 கிலோ. சென்னை எண்ணை 1 கிலோ. வெள்ளோடல் எண்ணை 1 கிலோ. தேங்ஙாய் எண்ணை 8 கிலோ. எள்ளைண்ணை 4 கிலோ. கறிமஞ்சள் 125 கிராம் மிளகு 250 கிராம் இவை இரண்டும் தூள் செய்து செளிபதத்தில் சேர்க்கவும். பொன்குறண்டி வேர்மேல் பூப்பு 500 கிராம் எண்ணை மெழுகு பதம் வரும்பொழுது சேர்க்கவும். புனுகின் சட்டம் 30 கிராம் ...

சிறுதாக நுறுக்கி எண்ணை மெழுகுபதம் வரும்பொழுது சேர்க்கவும்

. கடை மருந்து....

. சுக்கு வால்மிளகு அயமோதகம் வங்காளப் பச்சை கடுக்காத் தோடு பூதாவிருக்சம் குர்க்கில் திரிசாதி அதிமதுரம் வெளை கொட்டம் (கோஷ்டம்) கஸ்தூரி மஞ்சள் சிற்றரத்தை கரிம்சீரகம் அரிச்சன்னி நாயகம் தேவதாரம் வெள்ளை குந்திரிக்கம் நல்சீரம் ஏலரிசி அக்றகாரம் வசம்பு கார்கோலரிசி கரும்சூரைப் பட்டை சீனப்பாவு கரியபோளம்(கட்டிச்சன்னி நாயகம்) வெள்ளை பூண்டு கறிக் கடுகு பூவத்து (மஞ்சட்டி) இருவேலி (விளாமிச்சம் வேர்) வேப்பின் தோல் சந்தனம் 2 ஒவொன்றும் 30 கிராம் வீதம்

. வடிபாத்திரம் ..... அஞ்சனக்கல் 30 கிராம் பச்சை கர்பூரம் 30 கிராம் அபின் 15 கிராம். 

பதம்....கல்ப்பதம் முற்றி பிரியும்பொழுது....

 மருந்தளவு...15 மி.....0......15 மி. உணவுக்கு பின்

 (உள்பியோகமாகவும்,வெளி பிரயோகமாகவும் பயன்படுத்தலாம்) 

தீரும் நோய்கள்.....

 காயத்தால் வந்த எலும்புருக்கி நோய்கள், காய ஈடுகள், பஞ்சவர்ண குகைய்குளே தாவின காயங்கள்,காசம்,சுவாசம்,வலிகள்,இருமல்,கபநோய்கள், சன்னி வகை 13, தலயில் வந்த கயங்கள்,அநேக வாதநோய்கள்,பஞ்சபூதங்களின் தடுமாறுதலிநால் வரும் மன நோய்கள்,படுவற்மங்கள் 12,தொடுவற்மம் 96,உள்ளுவற்மம் 6,முளம்தண்டில் வரும் காயங்கள், ஆகின அநேக நோய்கள் இத்தைலத்தால் பரிபூர்ணமாக குணப்படும்...

. இது ஒரு பரம்பரையாயி கைமாறி வந்த ஒருரகஸிய தைலமுறை..... 600 வருடங்களாக வைத்திய குருக்கன்மாருடை அருள்பெற்ற எண்ணை....🙏🙏🙏

 மருந்து செய்முறையில் சந்தேகமிருந்தால் துடரவும்.... சுவாமி பத்மநாப கைபேசி..9496578362

Tuesday, August 18, 2020

பெரிய பெரியங்ஙாடி குடிநீர்

 பெரிய பெரியங்ஙாடி குடிநீர் (அனுபவ தமிழ் மருத்துவமுறை) திரிகடுகு திரிபலை திரிசாதி அரிசி 6 சந்தணம்.2 கன்னாரம் கொழுந்து கொட்டம்( கோஷ்டம்) வால்மிளகு வெட்டிவேர் விளாமிச்சம் வேர் கடுகுரோகிணி கண்டிவெண்ணை கன்மதம் (கோமூத்திர சிலாசத்து) மாசிக்காய் பர்ப்படகப் புல்லு வேப்பின்பட்டை சதகுப்பை கிரிசாத்து (நிலவேம்ப்பு) ஸஹஸ்றபேதி அதிமதுரம் வசம்பு குர்கில் (குல்குலு) வங்காளப் பச்சை சிற்றரதை கற்கடகசிங்கி சீரகம் 2 பூதாவிருக்ஷம் கொம்பரக்கு சீனப் பாவு சிறுதேக்கு வெள்ளை குந்திரிக்கம் (வெள்குங்கலீயம்) அக்றாவு(அக்றகாரம்) தேற்றான் கொட்டை முள் ஞெரிஞ்சில் நாங்கணம் மாஞ்சி சோமநாதி காயம் வெளைப் பூண்டு பிரி 2 சிவதை பஞ்சமன் பழுக்கை அகில் ருத்திராக்ஷம் இலவங்கம் முந்திரிப் பழம்(திராக்ஷை) கோரைக்கிழுங்கு அமுக்குரம் தக்கோலம் கச்சோலம் நாயகம் 2 பால்கெருடப்பசை கருநாவி நாகப்பூவு கண்டன்கத்திரி எலூற்றிப் பட்டை ஒவொன்றும் வகய்கு 5 கிராம் மேல்பொடி...கஸ்தூரி, கோரோசனை, புனுகு,குங்குமப்பூவு.... ஒரு சிட்டிகை மருந்தை சதைய்து 3 பொதியாக செய்து, ஒரு பொதியை 2 இடங்கழி தண்ணி விட்டு குடிநீர் செய்தூ 18 அவுண்ஸாக சுண்டவைய்த்து 50 மி.லி. முதல் 100 மி.லி. வரை நாளுக்கு இரண்டு அல்லது மூன்று வேளை உணவுக்கு முன்னே அருந்தி வர தீரும் நோய்கள்.... மூட்டுவலி, மேகவாதம், காச்சல்,வர்மத்தால் வந்த ஈடுகள்,காசல்,உடம்பு வலி,சூலைகள், அனேக வாதநோய்கள்,கபநோய்கள்,வாந்தி ஆகினவை மாறும். 12 நாள் 18 நாள் 24 நால் ஒருதடவை அருந்தவும். குடிநீரின் பகுதி அளவு பிரான்டி அல்லது நயம் வடிசாராயம் சேர்து அருந்திவர விரைவில் நோய் குணமாகும். சந்தேகமிருந்தால் துடர்வுகு சுவாமி மத்மனாப 9496578362