குழுவிலிருக்கும் அனைத்து வைத்தியர்கள்கும் வணக்கம்.
தாளகக் கட்டு பற்பம்
(இரோமச் செய்நீரினால் தயார் செய்வது) (அனுபவ முறை)
சிறு துண்டுகளாகச் செய்து சுண்ணாம்பு சுத்தி செய்த தாளகம் 35 கிராம்.
இரோமச் செய்நீர்...தேவயான அளவு.
சிப்பிச் சுண்ணம் ...தேவயான அளவு.
மருந்து தய்யார் செய்யும் விதம்.
சுத்தி செய்த தாளகக் கடைகளை ஒரு மண் அகலில் வைத்து அடுப்பேற்றி தீபாக்னியாக மூன்று மணி நேரம் சொட்டு சொட்டாக இரோமச் செய்நீர் சுறுக்கு தாக்கவும்.
பின் பாற்த்தால் தாளகக் கட்டி சிவப்பு நிறமாக மாறிவிடும். அதை கல்வத்தில் கொட்டி இரோமச் செய்நீரினால் ஒரு சாமம் நன்கு அரைத்து ஒரே விலையாக செய்து காயவய்க்கவும்.
பின் ஒரு மண்குடுவை எடுத்து அதில் நாலுவிரல் கனம் சிப்பிச் சுண்ணதை தூவி சற்று கைவிரல்களால் அமுக்கி, மேல் விலை வைத்து, விலைய்கு மேலும் நாலுவிரல் கனத்தில் சிப்பிச் சுண்ணதை கொட்டி ,சில்லிட்டு, சுண்ணாம்பு சீலை செய்து, அடுப்பேற்றி ஆறுமணி நேரம் தீபாக்னியாக தீயெரித்து, ஆறினபின் சட்டி திறந்து பார்த்தால் தாளகம் ஓறஞ்சு நிறத்தில் கெட்டி இருப்போம். இடை பார்த்தால் 50 முதல் 60 கிராமுக்குள் ஆகிவிடும்.
வீண்டும் விலை கல்வத்தில் இட்டு பொடிச் செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணிநேரம் நான்கு அரைத்து மூன்று அல்லது நாங்கு விலைகளாக செய்து காயவைய்க்கவும். இரண்டாமதும் முன்போல் புது சிப்பிச் சுண்ணத்துகுள் வைத்து, சுண்ணாம்பு சீலை செய்து அடுப்பேற்றி கமலாக்னியாக ஆறுமணி நேரம் எரித்து, சட்டி ஆறினபின் திறந்து பார்த்தால் விலைகள் பாதி சிவப்பும், பாதி கறுப்பு நிறவுமாகி மாறியிரிப்போம். இப்போது தாளகத்தின் இடை 75 கிராம் அளவில் ஆகிவிடும்
. வீண்டும் விலைகளை கல்வத்தில் இட்டு, பொடி செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணி நேரம் அரைத்து மிகவும் சிறு விலைகளாக செய்து காயவைத்து, முண்போல் புது சிப்பிச் சுண்ணத்துக்குள் வைத்து, சுண்ணச் சீலை செய்து ஆறுமணி நேரம் முன் போல் கமலாக்கினியாக எரிக்கவும். சட்டி ஆறின பின் பிரித்து பாற்த்தால் முழு விலைகளும் கறுப்பு நிறமாகி மாறி இருப்போம்....இடை 90 கிராம் அளவில் இருப்போம்.
இன்னும் 4 ம் 5 ம் புடங்கள் சிறுவிலைகளாக செய்து, தீபாக்னியாக தீயெரிக்கவும். 4 அல்லது 5 ம் புடத்தில் விலைகள் முழுமையாக மல்லிகை பூவின் நிறமடையும் என்று அறிக.
தற்ப்போது மருந்தின் இடை கிட்டத் திட்ட 125 கி. அளவு இருப்போம்.. விலைகளை கல்வத்தில் கொட்டி அரைத்து பொடி செய்து ஒரு கோப்யில் இட்டு சுத்த தன்னீர் விட்டு நன்றாக பிசெய்ந்து பிசெய்து, தெளிவு நீரை இறுத்து, புது தண்ணீர் ஊத்தி, ஊத்தி அய்ந்து தடவை, தெளிவு இறுத்து பாற்த்தால் வெடியுப்பு கரைந்து விட்டு 35 கிராம் தாளகம் மட்டும் கிடைக்க வேண்டும்.... தெளிவிறுத்து வெடியுப்பை மாற்றின பின் தாளகத்தை காயவைத்து, ஒரு புது சட்டியில் போட்டு வறுக்கவும். கொஞ்சம் கூட புகையாமல் முழுக் கெட்டாக தாளகம் நிற்ப்போம். வறுத்து எடுத்த, கெட்டின தாளகத்தை கல்வத்தில் போட்டு மூன்று மணிநேரம் அரைத்து பத்திரப்படுத்தவும்... நிறம் ....மல்லிகைபூவின் நிறமுடய பற்ப்பமாகி இருப்போம்.
மருந்தளவு....25 மி.கி. முதல் 50 மி.கி வரை இரு வேளை உணவுக்கு பின் 5 முதல் 10 நாட்கள் வரை மட்டும் ஒரு தடவை..பின் தேவைப்பட்டால் 30 நாட்கள்கு பின் அருந்தவும்.
துணை மருந்து...
தேன்,நைய்,,பனை வெல்லம் திரிகடுகு சூர்ணம்+ தேன், தகுந்த இளகங்கள், ஆகினவை...
தீரும் நோய்கள்....
நுரையீரல் வீக்கம், நுரையீரலழற்சி, பித்த வெடை, பித்தக் காச்சல், பித்தம், அனேகவிதமான கப நோய்கள்,மந்தார காசம், பித்த காசம், பித்த க்ஷயம், அனைத்து விதமான எலும்புருக்கி நோய்கள், இரைப்பு, இரைப்பிருமல், ஈளை, வலிப்பு, மேகம், அனேக விதமான தோல் நோய்கள், சீதசன்னி,ஆகின அனேக நோய்கள் மாறும்...
பத்தியம்...
உப்பு, புளி மிகவும் தவிற்க்கவும்.
நன்றி.....
தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்... சுவாமி பத்மநாபா.
கைபேசி.9496578362.